
டொக் டொக் டொக்
0
0
BLOG•
#YazhSathya#Short story
டொக்…. டொக்…!
டொக்…. டொக்…. டொக்…. டொக்….
இத்தோடு நாலாவது முறையாகக் கதவைத் தட்டும் சத்தம்.
முள்ளிவாய்க்காலுக்கு சிறிதே தொலைவில் புதிதாக எழுந்திருந்த அந்த சிறு கல் வீட்டின் முன்புறக் கதவைத் தான் வெகு நேரமாக யாரோ விட்டு விட்டுத் தட்டிக் கொண்டிருந்தார்கள்.
நேரம் என்னவோ இரவு பத்தரை தான். மார்கழி மாதம் தனது வேலையைக் காட்ட, வானம் தனது கண்ணீரை மண்ணுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. ஊதல் காற்று சட சடவென, அப்போதுதான் கொஞ்சமாய் கிளைகள் விடத் தொங்கியிருந்த கிளுவங் கதியால்களிடம் ஊடல் செய்து கொண்டிருந்தது.
...Loading...
Enjoyed this?
Sign in to clap