
எனை ஆளும் அழகே...
374
11.2k
SERIES•
Completed
About
அந்த மாநிலத்தை மட்டுமல்ல.. அரசியல் பலத்தையும் தன் கைக்குள் வைத்திருக்கும் நாயகன். நரகத்தில் தவிக்கும் நாயகியை மீட்டு வந்து அடைக்கலம் கொடுக்கிறான். அடைக்கலம் கொடுத்தவனின் மீது ஒரு கட்டத்தில் அவளுக்கு காதல் தோன்ற, அவனுக்கோ அவள் மீது காமம்.
பாதுகாப்பை கொடுத்த பெண்ணிடம் படுக்கையை நாட கூடாது என்று அவன் விலகி நின்று தவிக்க, அவளோ காதல் கொண்டு நெருங்குகிறாள்.
காதலை கொடுத்து காதலை வாங்கினாளா இல்லை காமத்தைக் கொடுத்து காதலை விலையாக்கினாளா என்பதுதான் கதை.
எனை ஆளும் அழகே... நிலா கிருஷி ஆளும் அழகே 1 : ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் இரவு நேரம் அது. வானில் கண் சிமிட்டிய நட்சத்திரங்களுக்குப் போட்டியாய் கம்பீரமாய் உலா வந்து கொண்டிருந்தாள் நிலவு அரசி. அனைத்து உயிரினங்களும் உறக்கத்தை நாடும் அந்த இரவு நேரத்தில் சென்னையை ஒட்டியிருந்த அந்தப் புறநகர் பகுதி மட்டும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பல கட்டுகளாய் விரிந்திருந்த பெரிய வீடு அது. ஜன சந்தடிகளைத் தவிர்த்து எந்தவொரு கடை கண்ணியும் இல்லாத இடத்தில் சற்றுப் பழைமை வாய்ந்த கட்டிடமாய் நிமிர்ந்திருந்தது....
Loading...
Enjoyed this?
Sign in to clap