
வஞ்சகனின் வல்லினமே
20
122
SERIES•
Ongoing#love#mystery stories
About
“உன் உடம்பு அவ்வளவு கேக்குதா ரோட்டுல போய் நில்லு இதுக்குன்னே எவனாவது திரியிவானுங்க அவங்ககிட்ட போயி உன் ஆசையை தீர்த்துக்கோ” இரக்கம் இல்லாமல் மொழிந்தான் சித்தார்த்.
அவன் வார்த்தையில் குடித்துப் போனால் ஆருத்ரா.
இரண்டு வருடமாக துரத்தி துரத்தி காதலித்து திருமணம் செய்து கொண்ட சித்தார்த் , மனைவியான பின் ஆருத்ராவை வசை பாட காரணம் என்ன?
காதலனின் முகம் உண்மையானதா,
இல்லை கணவனின் முகம் உண்மையானதா என்று தெரியாமல் தவிக்கும் ஆருத்ராவின் நிலை என்ன?
வாசியுங்கள்
அந்த பெரிய மண்டபத்தின் வாசலில் நின்றிருந்த காரின் கதவைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் ஒரு காரிகை. மாலையும் கழுத்துமாய் இருந்த அவளைச் சுற்றி நின்றிருந்த அவளுடைய குடும்பம் அவளை சமாதானப் படுத்துகிறேன் பேர்வழி என்று இன்னும் அழ வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது “அடடா பொண்ணு எங்க போற புருஷன் வீட்டுக்கு வாழத் தானே போறா? கோயம்புத்தூர்ல இருந்து இங்க இருக்கிற சென்னைக்கு தானே பொண்ணை அனுப்பப் போறீங்க? என்னமோ இனிமே அவளை பார்க்கவே முடியாத மாதிரி அழுகுறீங்களே! மாப்பிள்ளையும் எவ்வளவு நேரம் தான்...
Loading...
Enjoyed this?
Sign in to clap