
இராட்சனின் ரதியவள்
5
34
SERIES•
Ongoing#book lover#story writer
About
கோபத்தின் மறு உருவமாய் வாழ்ந்தவன் துவேஷ்தீரன். அவனின் பார்வையே பலரை நடுங்க வைக்கும்; அவனின் கோபம் பலரின் மனதில் பயத்தை விதைக்கும். ஆனால் அந்த இரும்பு மனதையும், முதல் பார்வையிலேயே தனது காதலால் சிறைபிடித்தவள் நிதிஷா ஸ்ரீ.
அவளுக்காக அவன் கோபத்தை மறக்கத் தயாரானவன். அவளின் சிரிப்பில் தனது மகிழ்ச்சியையும், அவளின் கண்ணீரில் தனது வலியையும் கண்டவன். அவனின் ஆதி, அந்தம், உயிர், உலகம் அனைத்தும் அவளே. நிதிஷா ஸ்ரீயின் மீது வைத்த காதலுக்காக எதையும் செய்யத் தயங்காதவன் துவேஷ்தீரன்.
காற்றை கிழிக்கும் சூறாவளி வேகத்தில் தன்னுடைய ரோல்ஸ்-ராய்ஸ் ப்ளாகில் பறந்து கொண்டு இருந்தவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் ,முட்டி மோதி அவனின் பின்னால் இரண்டு கார்கள் வந்து நிற்க,மின்னல் வேகத்தில் வந்தவனோ கம்பீரமாய் இறங்கி,அனல் கக்கும் பார்வையை அவர்கள் இருவரின் மீதும் வீச'அந்த பார்வையின் தாக்கத்தை எதிர் கொள்ள இயலாத அவர்களோ பயத்தில் தலையை தொங்க போட்டனர். "ஆண்களே கண்டு பொறாமை படும் அளவிற்கு செதுக்கப்பட்ட ஆறடி ஆண்மகன் இவன்... எலுமிச்சை நிறம்,கவர்ந்திழுக்கும் காந்த கண்கள்... துள்ளியமாய் எடை...
Loading...
Enjoyed this?
Sign in to clap