
மாமா மானே நான் கூட ஐ லவ் யூ
6
59
SERIES•
OngoingIthayamozhi championship 2026#Fight and after love
About
அத்தை பொண்ணு மாமா பையனுக்கும் நடக்கும் சண்டை கலந்த காதல் கதை. பெற்றோர்களின் வற்புறுத்தலால் திகழ் செலுபனுக்கும் திகழினிக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். இருவரும் செம்ம சண்டை கோழிங்க. சின்ன வயசுலருந்து ஒருவரை ஒருவருக்கு பிடிக்காது. எங்கே எப்ப பார்த்தாலும் முறைப்பு இல்லைன்னா வாய்க்கால் தகராறு சண்டை நடக்கும். இவர்களின் பஞ்சயத்தை தீர்த்து வைக்கவே பெற்றோர்களுக்கு போதும் போதும் என ஆகி விடும். அப்படி இருக்க இருவருக்கும் கல்யாணமா? காமெடி, பொறாமை கலந்த காதல் கதை ஜாலியா படிக்கலாம் வாங்க.
லவ் 1 "இல்ல முடியாது எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல அவள்ளாம் ஒரு பொண்ணா அவளை போய் கலயாணம் பண்ணிக்க சொல்றிங்க?" கோபத்தோடு தெருக் கோடிக்கே கேட்கும் வரை கத்தி பேசி கொண்டிருந்தான் திகழ்செலும்பன். "டேய் முதல்ல இப்படி கத்துறத நிறுத்துடா எதுக்குடா தெருவே கேக்குற மாதிரி இந்த கத்து கத்துற அக்கம் பக்கத்து ஆளுங்க என்னமோ ஏதோனு நினைக்கப் போறாங்க. இங்க பாரு உனக்கும் கல்யாணம் பேசி முடிவெடுத்தாச்சு ஜோசியரை பார்த்து நாளும் தேதியும் குறிச்சுட்டு வந்தாச்சு. அடுத்த மாசம் 15ஆம் தேதி கல்யாணம் ரெடியா இரு....
Loading...
Enjoyed this?
Sign in to clap