
அரவு சூடும் அணங்கிவள்
0
42
SERIES•
Ongoing#lovestory#revenge love
About
காதலை, பெண்களை வெறுப்பவனை காதலால் கைபற்றி விட்டு செல்கிறாள் பெண்ணவள்...
ஏற்கனவே யாரையும் நம்பாமல் இருப்பவன் தன் ஆருயிர் மனைவி துரோகத்தால் துடித்து போவானா? எதற்காக அவனை விட்டு சென்றாள் பெண்ணவள்?
அரவு❤️ பாம்பு அணங்கு❤️ தெய்வ பெண் வெய்யோன் தன் கதிர்களை பூமியில் சுகமாக வீசிக்கொண்டிருக்க பறவைகளும், செடி கொடிகளும் அதை சுகமாய் உள்வாங்கிக் கொண்டு அந்த காலை வேளையில் தங்கள் வேலையை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருந்தது. அவைகளுக்கெல்லாம் போட்டியாய் ஒருவன் அதிக சுறுசுறுப்போடு தன் நண்பனை தேடி வந்து கொண்டிருந்தான். “பாவி பய ஒரு நாளாவது நிம்மதியா தூங்க விடுறானா? இவனுக்கு பிரண்டா இருக்குறதுக்கு இன்னும் என்னென்ன அனுபவிக்கனுமோ!” என புலம்பிக் கொண்டே தன் நாளை தொடங்கினான் ஆதன். அவன் புலம்பலுக்கு காரணமானவனோ...
Loading...
Enjoyed this?
Sign in to clap