
கலாட்டா கல்யாணம் (வேண்டுமடி நீ எனக்கு சீசன் 3) : Galaatta Kalyanam
0
127
EBOOK•
Completed
About
இது 'வேண்டுமடி நீ எனக்கு' கதையின் சீசன் 3 ஆகும். கதையின் நாயகனும் நாயகியும் முதலில் ஒப்பந்தக் காதலில் நுழைந்து, பிறகு சந்தர்ப்பவசத்தால் ஒப்பந்தத் திருமணத்தில் அடியெடுத்து வைக்கின்றனர். இருவரும் எப்படி மனம் ஒத்து வாழ்க்கையில் ஒன்று சேருகின்றனர் என்பது தான் கதை. இதில் வேண்டுமடி நீ எனக்கு கதையின் சீசன் 1 நாயகன் நாயகியும் சீசன் 2 நாயகன் நாயகியும் இவர்களை ஒன்று சேர்க்க என்னவெல்லாம் திட்டம் போடுகின்றனர், அவற்றை எப்படியெல்லாம் செயல்படுத்துகின்றனர் என்பதை நகைச்சுவையோடு எழுதப்பட்ட கதை. வாசித்துப் பாருங்க
அத்தியாயம் - 1 ஆதவன், தான் வந்த வேலையை செவ்வனே முடித்து விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கே இறங்கிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரம். இள மஞ்சளும் செம்மையும் கலந்த ஒரு அழகான போர்வையைத் தன் மீது பரப்பிக் கொண்டு, அதிக வெப்பமும் அல்லாது குளிரும் அல்லாமல் பரந்து விரிந்து ஒரு விதமான இதத்தைத் தந்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தாள் வானமகள். அந்நேரத்தில் கடற்கரையில் கூட்டம் இன்னும் அதிகம் சேர ஆரம்பிக்கவில்லை. ஆங்காங்கே மக்கள் சிலர் காணப்பட்டனர். ஒரு புறத்தில், கல்லூரி வகுப்பைக் கட் அடித்து வந்த மாணவ மாணவியர்...
Loading...
Enjoyed this?
Sign in to clap