
காதல் நீ தானா....
3
3
SERIES•
Ongoing
About
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
. அன்பே உருவான அழகிய பெண்ணொருத்தி அன்பிற்கு ஏங்குகிறாள். உண்மையான அன்பையும், காதலையும் அவள் வாழ்க்கையில் பெற்றதைப் பற்றியே இக்கதை பேசுகிறது.
அத்தியாயம் - 1 உலகமே இருண்டு விட்டதைப் போல் இருந்தது மைதிலிக்கு. ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் கணவனே தன் உயிரைப் பறிக்கத் துடிக்கும் கொலைகாரனாய் மாறிப் போனதை நினைத்த உடனே நெஞ்சம் வலித்தது. தன் ஆசை கணவனான கருணாகரனின் உருண்டு, விரிந்த கண்களில் கொப்பளித்த தன் மீதான வெறுப்பை முதல் முறையாகக் கண்டவுடன் மயக்கமே வந்து விட்டது மைதிலிக்கு. கண்கள் இருண்டு கீழே விழப்போனவளின் கூந்தலைக் கொத்தாகப் பிடித்தான் கருணாகரன். தலைமுடி முழுவதையும் அவன் பிடித்திருந்ததால், மைதிலிக்கு தலைவலியில் உயிரே...
Loading...
Enjoyed this?
Sign in to clap