Skip to content
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

0
63
EBOOK
Completed#love #possessive #Friendship
Sabareeshwari
Sabareeshwari

About

நட்பாக ஆரம்பித்த உரையாடல்கள், தினமும் தொடரும் சிறு சிறு வாக்குவாதங்கள், ஒருவரை ஒருவர் சீண்டிக்கொள்ளும் குறும்புகள்—இவை அனைத்தும் எப்போது காதலாக மாறின என்பது அவர்களுக்கே தெரியவில்லை.

அர்ஜுன்... கலகலப்பும், அக்கறையும், கோபமும் கலந்தவன்.

மித்ரயாழினி... தன்னம்பிக்கை, துடிப்பு, குறும்பு என அனைத்தையும் தன்னுள் கொண்டவள்.

காதல் அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதே இந்தக் கதையின் பயணம்.

"உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்" – இதயம் புன்னகைக்கும் ஒரு காதல் பயணம்.

1.உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் வாழை மரங்கள் வாசலில் வரவேற்க மங்கள வாத்தியங்கள் முழங்க ஆங்காங்கே தேவதைகள் வலம் வர அந்த திருமண மண்டபம் கலைக்கட்டியது... வரவேற்பு மேடையில் மணமக்கள் பரிசுகளை பெற்றுக்கொண்டும் நண்பர்களின் கேளிகளை ரசித்துக் கொண்டும் இருந்தனர். அப்போது நம் கதையின் நாயகி மேடை ஏறினாள். "என்ன சிவா மாமா என்ன விட்டுட்டு ஐசுவை கல்யாணம் பன்னிக்க போறிங்க.... என்னை கொஞ்சமாச்சும் நினைச்சு பார்த்தீங்களா நீங்க?? எனக்கு இவ்ளோபெரிய துரோகத்தை செய்ய உங்க மனசு எப்படி இடம் கொடுத்தது?? சொல்லுங்க??...
Loading...

Enjoyed this?

Sign in to clap