
மரியாதையை வென்ற மங்கை
3
14
SERIES•
OngoingIthayamozhi championship 2026#இக்கதையில் வரும் கதை மாந்தர்களின் பெயர்கள்,ஊர் என்று அனைத்தும் என் கற்பனையே..கல்யாணத்திற்கு முன்பு ஒரு மாதம் மணமகனின் வீட்டில் தங்கி இருந்து மணமகனை மட்டுமல்லாமல் அவன் குடும்பத்தினரையும் பிடித்தால் மட்டுமே அவனை தன் கணவனாக ஏற்றுக் கொள்ளும் 'மணமகளின் தேர்வு' பற்றிய கதை இது
About
இந்த கதையில் வரும் கதை மாந்தர்களின் பெயர்கள், ஊர் என்று அனைத்தும் என் கற்பனையே.. கல்யாணத்திற்கு முன்பு மணமகனின் வீட்டில் ஒரு மாதம் தங்கி இருந்து மணமகனோடு சேர்ந்து அவனது குடும்பத்தினரையும் பிடித்தால் மட்டுமே அவனை தன் கணவனாக ஏற்றுக்கொள்ளும் 'மணமகளின் தேர்வு' பற்றிய கதை இது.
"அப்பா... இதெல்லாம் இந்தக் காலத்துல சரியா வரும்னு நம்புறீங்களா?" சென்னையின் பிரபலமான ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜித், குடித்துக் கொண்டிருந்த காஃபி கோப்பையை மேசையில் வைத்தபடி எதிரே அமர்ந்திருந்த தன் தந்தை சிவசுப்ரமணியத்தை பார்த்து கேட்டான்... சிவசுப்ரமணியம் மெதுவாகப் புன்னகைத்தவர் "என்னடா.. உனக்குப் பிடிக்கலையா?" என்று கேட்க.."பிடிக்கலைன்னு இல்ல ப்பா...ஆனா ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு மாசம் நம்ம வீட்டுல வந்து தங்குவாங்கன்னு கேட்டாலே... இப்போ யாரு ஒத்துப்பாங்க?"...
Loading...
Enjoyed this?
Sign in to clap