
காதல் எனும் கவிதை
About
தாயின் விருப்பத்திற்காக பெண்பார்க்க சம்மதிக்கும் நிரஞ்சன்... பெண்ணின் வீட்டைப் பார்த்து அதிர்ந்து போனதோடு, பல வரன்கள் தடைப்பட்டுப்போய் வெறுமையான உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ரேவதியை சந்திக்கிறான்.
நிரஞ்சன் ரேவதியிடம் தன் மனதில் இருப்பதை சொல்வதற்கு முன்பாகவே அவனது தாய் கமலா நிச்சயதார்த்தத்திற்கான தேதியை குறித்துவிட, இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தடுமாறினான் நிரஞ்சன்.
நிரஞ்சன் திருமணம் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் என்ன? தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்...
காதல் எனும் கவிதை...
காலை ஏழு மணி, T.Nagar-ல இருக்குற அந்த வீடு — சின்னதும் இல்ல, பெரிசும் இல்ல, சொந்தமா கட்டிக்கிட்ட ஒரு comfortableலான வீடு.
கிச்சன்ல இருந்து பில்ட்டர் காபியின் வாசனை வீடு முழுக்க பரவியிருக்க, கமலா அம்மா கையில் தோசை கரண்டியை வச்சிட்டு, "நிரஞ்சா... நிரஞ்சா ஏய்! சீக்கிரம் கிளம்பி வாடா... இன்னும் உனக்கு ஆபீஸ்க்கு லேட் ஆகலையா"ன்னு குரல் கொடுத்துட்டிருந்தாங்க.
உள்ள ரூம்ல இருந்து "வாறேன்ம்மா, ரெடி ஆயிட்டிருக்கேன்" ன்னு ஒரு குரல் வந்தது.
அவனே நிரஞ்சன். கமலா அம்மாவின் ஒரே அன்பு மகன்.
ஒரு நிமிஷம் கழிச்
...Enjoyed this?
Sign in to clap