
நீ எங்கள் உயிரடி கண்ணம்மா..
About
அன்பை மட்டுமே உலகமாகக் கொண்ட ஒரு தந்தையின் செல்ல மகள்.. அவளின் சிரிப்புக்காக எதையும் செய்யத் தயங்காத காதலன்.. அவர்களைச் சுற்றி உருவாகும் பொறாமை, சதி, பழிவாங்கும் எண்ணங்கள், மறைக்கப்பட்ட உண்மைகள்.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை புரட்டிப் போடும் சம்பவங்கள் தொடரும் போது, காதல் அனைத்தையும் வெல்லுமா? இல்லை விதி அவர்களை பிரித்துவிடுமா? உணர்வுகள், பாசம், காதல், மர்மம், அதிரடி நிறைந்த பயணமே
"நீ எங்கள் உயிரடி கண்ணம்மா.."
✍️ எழுத்தாளர்: நிழல் காதலி
நீ எங்கள் உயிரடி கண்ணம்மா…
அத்தியாயம் 1
காலை பொழுது கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தார் இராவணன் கதிர்வேல்.. சென்னையின் கமிஷனர் நாற்பத்தி ஆறு வயது நிறைந்தவர்.. முடி நரைத்து இருந்தாலும் தோலில் சுருக்கம் இல்லை.. இந்த வயதிலும் உடற்பயிற்சி செய்து கம்பீரமாக இருந்தார்.. அவரை பார்ப்பவர்கள் எப்படியும் இவருக்கு ஒரு முப்பத்தைந்து தான் வயது இருக்கும் என்று எண்ண கூடியவாறு இருந்தார்..
சமையலை முடித்தவர் ஒரு அறைக்குள் நுழைந்தார்.. அறை மெல்லிய வெளிச்சமாக இருந்தது.. கட்டிலில் குழந்தை போல் உறங்கியிருந்தாள் அவ
...Enjoyed this?
Sign in to clap