
மனதோடு ஒன்றாகு உறவாலே
About
தன் ஆபத்துக் காலங்களில் எல்லாம் உடன் இருக்கும் வசுதாவை மண முடித்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்பி அவள் பெற்றோரிடம் பெண் கேட்கிறான் மது. தாய் தகப்பனற்ற யாருமற்ற அனாதையான மதுவிற்கு பெண்ணைத் தர மறுக்கிறார் அவர். காதல் தான் முக்கியம் என அவரை மீறி வெளியே வர முடியாத குடும்ப சூழ்நிலை வசுவிற்கு. உயிர் தோழியுமான மாயாவை மணம் முடிக்கிறான் மது. மீண்டும் வசு திருமணம் செய்ய வலியுறுத்துகிறாள் மாயா. மது, மாயாவின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் மாயாவை பிரிகிறானா? வசுவை மணக்கிறானா? பார்ப்போம்.
மனதோடு ஒன்றாகு உறவாலே
G.சியாமளா கோபு
மனதோடு ஒன்றாகு உறவாலே.
டீஸர்
“மாயா”
“ம்”
“நீ புராண காலத்தில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?”
“ஏன்?”
“பாவம் நக்கீரன். சிவனால் எரிந்திருக்க மாட்டான்”
“எப்படி?”
“உன் கூந்தலில் இயற்கையான மணம் இருக்கிறதே”
“ஆனால் நீங்கள் கூந்தலை முகரவிலை மது”
“ஆமாம். சரி தான்” சொன்னவனின் கைகள் அவளை பின்னிலிருந்து அணைத்து தன்னோடு பிடித்து கொண்டிருந்தது. முகமோ கூந்தலில் இல்லை. தோளின் வளைவில் அழுந்த புதைந்திருந்தது.அவள் கை பின
...Enjoyed this?
Sign in to clap