
akkiniyin saaral
About
அக்கினியின் சாரல்
பிரேமா காமேஸ்வரன்
ஆர்பரிக்கும் வேள்வியின் அக்கினியாய் பெண்…
வேள்வியில் இடப்படும் ஆகுதியாய் ஆண்…
இணைந்து நடத்தும் அதிசய அக்கினியின் சாரல்…
அக்கினியா... சாரலா...
பார்க்கும் பார்வையில்
உன் மனதின் பிம்பமாய்
உன்னை பிரதிபலிக்கும் கண்ணாடியாய் ஓர் இணை
காதலாய் கர்வமாய் …
ஆக்ரோஷ காட்டருவி…
பாறைகளில் முட்டி மோதி
அன்னநடையிடும்
மென்நதியாய் மாறும்
ஒரு வாழ்வியல் சுழற்சி
இந்த அக்கினியின் சாரல்
அக்கினியின் சாரல்
சாரல் 1
முகம் மோதும்
மென்மழை சாரல் ரசித்திருக்கிறேன்…
மூச்சினை நிறைக்கும்
பூங்காற்றின் சாரல்
ஸ்பரிசித்து இருக்கிறேன்…
முதல் முதலாய்
அக்கினியின் சாரல் தரிசிக்கிறேன்…
மெய்மறந்து தகிப்பில் சுகிக்கிறேன்…
" இது என்ன டா பெருங்கொடுமையா இருக்கு. மீசை வச்சா இந்திரன், மீசை இல்லைன்னா சந்திரன் கதையா போகுது. அவன் போட்டா ஒரு கதை அவள் போட்ட வேற கதைன்னு….மனசாட்சி கொஞ்சம் கூட இருக்காதா உங்களுக்கு. நேத்து தான இந்த பேர்ல ஒரு ஹீரோ வச்சு எழுதுன ஸ்டோரி மாஸ் ஹிட் ஆச்சுன்னு சொல்லி போஸ்ட் பாத்தேன்.
...Enjoyed this?
Sign in to clap