
சர்வமும் நான்
About
இந்தக் கதையில்,
ஒவ்வொருவருக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது.
ஒவ்வொரு ரகசியத்திற்கும் ஒரு விலை இருக்கிறது.
அந்த விலையை யார் செலுத்தப் போகிறார்கள்…?
இது நல்லவர்களின் கதையில்லை.
இது கெட்டவர்களின் கதையுமில்லை.
இது… “சரியாக இருக்க முயலும் தவறான மனிதர்களின்” கதை.
ஒரு தருணத்தில், எல்லா பாதைகளும் ஒன்று சேரும்.
அப்போது ஒரு கேள்வி வரும்.
"எது சரி? எது தப்பு?”
அதற்கான பதில்…
வாசிங்க
சர்வமும் நான்
சர்வமும் நான்
1
அதியன் ஆனந்தம்
மாலை நேரத்துச் செவ்வானம் அந்தப் பரந்த மைதானத்தின் மீது தன் பொன்னிறத் தூரிகையால் வண்ணங்களைத் தெளித்துக் கொண்டிருந்தது.
அதன் மையப்பகுதியில், வானத்தை முட்டி நின்றது கம்பீரமான சிவபெருமானின் பிரம்மாண்டமான கற்சிலை!
ஒரு காலை உயர்த்தி, தாண்டவ முத்திரையோடு வீற்றிருக்கும் அந்தச் சிவனின் சிற்ப வேலைப்பாடுகள்... எந்த ஒரு மனிதனையும் ஒரு கணம் மெய்சிலிர்க்க வைத்துவிடும்.
சுற்றிலும் சில கட்டுமானப் பணிகள் மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் நடந்து கொண்டிருந்தன. கற்கள் செதுக்கப்படும் ஓசையு
...Enjoyed this?
Sign in to clap