
மதியில் நிறைந்த மாறன்.
About
அக்காவை திருமணம் செய்ய வந்து அவள் ஓடிப்போனதால், தங்கையை திருமணம் செய்யும் ராணுவ வீரனின் கதை.
ஒருவனை காதலித்து ஓடிப்போகும் பெண், அதன் பின் படும் அவஸ்தைகள், அவளால் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லும் கதை.
ஏமாற்றம் அடைந்து திரும்பும் அக்காவால், தங்கையின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் என ஊடலும், கூடலும் கலந்த சமூக கதை.
மதியில் நிறைந்த மாறன்.
மாறன்-1
" உங்க எதிர்பார்ப்புக்கு, என் அக்கா தான் இருந்தாளா. நான் இல்லையா" ஏதோ ஒரு உந்துதலில் கேட்டு விட்டாள் இளமதி.
அவள் கேள்வியில் வாசல் வரை போனவன் திரும்பி நின்று, " உன் அக்காவையும் முதல் தரம் நேத்து வரவேற்பு மணமேடைல தான் பார்த்தேன். எந்த பொண்ணா இருந்தாலும், கல்யாணத்துக்கு அப்புறம் என் மனைவியா அவளை நேசிக்க முடியும்கிறது என்னோட நம்பிக்கை" என மாறன் அழுத்தமாக பதில் தர, அவள் கண்ணில் ஓர் மின்னல்.
இளமதியின் அக்காள் நிறைமதிக்கு நிச்சயித்திருந்த மாப்பிள்ளை தான், மணிமாறன
...Enjoyed this?
Sign in to clap