
கனியுமா காயம் தந்த காலம்
About
பெண் மனம் கொண்ட காதலுக்காய்
ஊரார் பேச சகித்திடும் கடந்தும் விடும்...
உடையவன் பேசினால் சிதைந்து போகாதோ?
சிதைந்து போன உள்ளத்தால் என்ன செய்ய இயலும்?
தெரிந்து கொள்ள வேண்டுமா? புரட்டுங்கள் புத்தகத்தின் பக்கங்களை...
விரியும் பக்கங்களில் மங்கையாய் கனவுகளில் தொடங்கி
மடந்தையான ஒருவரின் காதல் வாழ்க்கை பயணம்.
பயணம் போகலாமா அவளுக்கு துணையாக...
கனியுமா காயம் தந்த காலம்
பிரேமா காமேஸ்வரன்
அத்தியாயம் 1
சஷ்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
தூங்கா நகரமான மதுரையின் பரப்பரப்புகள் அண்டாத மேல் தட்டு வர்க்க மக்கள் வாழும் அண்ணா நகர் பகுதியில் அந்தப் பகுதி மக்களால் நிர்மாணிக்கப்பட்ட அம்பிகையின் கோவிலில் அமைந்திருந்த
...Enjoyed this?
Sign in to clap