
ஆனால் அன்பே! நீதான் அன்பே!
About
கணவனை இழந்த அதே நாளில், அனைவரின் முன்னிலும் மர்மமான ஒருவன் வேதாவின் கழுத்தில் மீண்டும் தாலி கட்டுகிறான். அவனை வெறுத்தாலும், அவனிடமிருந்து தப்பிக்க முடியாமல் அவனுடைய உலகிற்குள் நுழைகிறாள் அவள். ஆனால் அங்கே காத்திருப்பது இன்னொரு அதிர்ச்சி—அவனுக்கு ஏற்கனவே ஒரு மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறார்கள்! காதலா? துரோகமா? அல்லது யாருக்கும் தெரியாத ஒரு ரகசியமா? உயிரைப் பணயம் வைக்கும் மர்மங்கள், இதயத்தை உலுக்கும் உணர்வுகள், எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு காதல்-த்ரில்லர் பயணம் இது.
எதற்காக இவை அனைத்தும் இன்று நமக்கு நடக்கிறது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாள் அவள்.
சுற்றிலும் ஒலித்த அழுகைக் குரல் அவள் காதைக் கிழித்தது. அனைவரையும் பார்க்கப் பார்க்க எரிச்சலாக இருந்தது.
தன்னைச் சுற்றிப் பத்து பெண்கள் அவளைக் கட்டி அணைத்து, அழுது, புரண்டு, அவளை நாசம் செய்வது போல் தோன்றியது.
இதற்கிடையில் ஒரு கிழவி வந்து அவளுடைய இரு கைகளையும் ஓங்கி அடிக்க, அவள் அணிந்திருந்த வளையல்கள் எல்லாம் சுக்குநூறாக உடைந்து, அவள் கைகளில் காயத்தை உண்டாக்கி விழுந்தன.
இரத்தம் நிற்காமல் சொட்டிக்கொண்டிருந்தது. அவள
...Enjoyed this?
Sign in to clap