
வதைக்காதே என் விழிநிலவே-PART-3-உன் ஸ்பரிசத்தின் வெப்பம்
About
காதல் தொடும் ஒரு நொடி... வாழ்க்கையை தலைகீழாக மாற்றுமா?
மர்மம் நிறைந்த ரகசியப் பிரதேசம், அதிகாரத்திற்காக கொதிக்கும் வாரிசுகள், உயிரைப் பறிக்கும் சதிகள், மறக்க முடியாத காதல், பிரிவின் வலி, சொல்லப்படாத உண்மைகள்... இவை அனைத்திற்கும் நடுவே விழிமதியின் வாழ்க்கை எந்த திசைக்கு செல்லப் போகிறது? ஒரு கனவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன? காதல் காப்பாற்றுமா... இல்லை விதி அனைத்தையும் பறித்துச் செல்லுமா? ஒவ்வொரு அத்தியாயமும் உங்களை அடுத்த பக்கத்திற்கு இழுத்துச் செல்லும் பரபரப்பான காதல்–மர்மப் பயணம்!
ஹாய்...! எல்லாரும் எப்படி இருக்கீங்க?... எப்படியோ ஒரு வழியா அடுத்த பாகத்தை தொடங்கிட்டேன். உங்களுக்காக எழுதப்படும் இக்கதையின் மூன்றாவது பாகம் பல சுவாரஸ்யங்களுடன் இதோ உங்களுக்காக..... கதைக்குள் செல்வோம்....
"உன் ஸ்பரிசத்தின் வெப்பம்"
கன்னியின் காய்ச்சல்…
பச்சை பசேலென நெற்கதிர்கள் பூத்துக் குலுங்கும் அந்த மண்ணின் ஈரப்பதம் எப்போதுமே குறைந்ததில்லை. மாசற்ற தூய காற்று அங்குள்ள வானுயர்ந்த மரங்கள் ஒவ்வொன்றையும் இதமாகத் தீண்டி மெல்ல நகர்ந்து, அடுத்து அங்குள்ள ஆற்றில் பட்டு, மாபெரும் அருவியைத் தாண்டி ஆங
...Enjoyed this?
Sign in to clap