Skip to content
எரியும் சுடரில் ஒரு தளிர்

எரியும் சுடரில் ஒரு தளிர்

24
71
SERIES
Ongoing
Hema Gobal
Hema Gobal

About

இது அன்ரி ஹீரோ வகையைச் சார்ந்தது. ஹீரோ அக்னி ருத்ரனின் கம்பனியில் பீயுனாக வேலைப்பார்க்கும் சுந்தரத்தின் மகள் வெண்பா மீது காதல் கொளிகிறான் நாயகன். அதை வார்த்தையாக அவளிடம் சொல்லாமல் திடு திடுப்பென கல்யாணத்தையும் முடித்துவிட அதன் பின்னரான கதையைக் காதலுடன் சொல்ல முயன்றிருக்கிறேன். எனக்கு தெரிந்த அளவில் கொஞ்சம் ரொமன்ஸ் காட்சிகளையும் இடை இடையே தூவி வாசகர்களுக்கு பிடித்தது போல வடிவமைத்திருக்கிறேன். வாசிக்க விருப்பமுள்ளவர்கள் வாசிக்கலாம்.

அத்தியாயம் 1 அந்தப் பிரம்மாண்டமான முதலிரவு அறையின் நடுவே நின்றிருந்தான் அக்னி ருத்ரன். அவனது புது மனைவி வெண்பா கேட்ட அந்த ஒற்றைக் கேள்வி, அவனது பெயருக்கு ஏற்றாற்போலவே கண்களில் கோபக் கனல்களைத் தகதகவென எரியச் செய்தது. ஒரு புதுக் கணவனிடம், அதுவும் அந்த முதலிரவு அறையில், முதன்முதலாகப் பேசத் தொடங்கும் வேளையில் எந்த ஒரு மனைவியும் கேட்கத் துணியாத கேள்வி அது! "நீங்க என்னைத் தொட்டால் எனக்கு ஏதும் வரக்கூடாத நோய் வருமா?" எனத் தன் கழுத்தில் தாலிகட்டிய கணவனைப் பார்த்து, உடைந்த குரலில் கேட்டிருந்தாள் வெண்பா....
Loading...

Enjoyed this?

Sign in to clap