
பனி இரவில் தணலாவாய் (தீபாஸ்)
About
வஞ்சகத்தையும் வலியையும் கடந்து, அன்பு இறுதியில் வெல்லும் என்ற நம்பிக்கையை விதைக்கும் கதை இது.
குடும்பம், காதல், தியாகம், மன்னிப்பு—இந்த நான்கு உணர்வுகளையும் ஒன்றாக சுமந்து செல்லும் "பனி இரவில் தணலாவாய்" உங்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.
பனி இரவில் தணலாவாய் (பாகம் 1&2)
அத்தியாயம் – 1
அன்று காலை முதலே அழகுநிலா எதுவும் சாப்பிடாமல், அறைக்குள் படுத்தபடியே இருந்தாள்.
"அடியே அழகி...! ஏன்டி இப்படி சண்டித்தனம் பண்ற? பொட்டப் புள்ளைக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுடி.
நீ என்னதான் முரண்டு பிடிச்சாலும், உன்னை டவுனுக்கெல்லாம் வேலைக்கு அனுப்ப மாட்டேன்.
உன்னை கைக்குள்ளே பொத்திப் பொத்தி வளர்த்தேன். நல்ல பொறுப்பான ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டா, அதுக்கப்புறம் உன் பாடு... உன் புருஷன் பாடு. இப்போ தொலைதூரத்துக்கு வேலைக்கு அனுப்பிட்டு, நான்
...Enjoyed this?
Sign in to clap