
மிகலியின் முத்தங்கள்..!
About
தனக்கென குடும்பத்தினரால் நிச்சயிக்க பட்ட அத்தை மகள் தனக்காக காத்திருக்க, பணிக்கு சென்ற இடத்தில் எதிர்பாரா விதமாக அங்கிருந்த பழங்குடி பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி மனைவியாகினாலும், அவனால் தன் குடும்பத்தை எதிர்க்க முடியாமல், தாலி கட்டிய அன்றே மனைவியை விட்டு பிரிகிறான் நாயகன்.. ஒருபுறம் மனசாட்சி நெருப்பாய் அவனை சுட்டெரிக்க, மறுபுறம் குடும்ப ஒற்றுமை குலையாமல் காக்க வேண்டிய கடமை அவனை பாசக்கயிராய் மாறி இழுத்திட, இருகொள்ளி எறும்பினை போல தவித்திடும் நாயகனின் மனதிற்கு இதம் கொடுக்க வருவாளா நாயகி..?
முத்தம் -01
அதிகாலை நேரம் வங்கக்கடலின் அடியிலிருந்து உதித்தெழுந்த ஒளிப்பிழம்பான செங்கதிரவனோ, தன் ஒளிக்கற்றைகளை புவியெங்கும் வீசி தன் ஆளுமையை பரப்பிக்கொண்டிருந்தவேளையில், இங்கே தமிழகத்தின் தலைநகரமாய் திகழும் சிங்கார சென்னை மாநகரிலே அமைந்துள்ள வடபழனி முருகன் கோவிலிலோ, அந்த காலை வேளையை பக்திபரவசமாக மாற்றிடும்படி ஒலிக்கக்கூடிய, “சஷ்டியை நோக்க.. சரவண பவனார்.. சிஸ்டருக்குதவும் செங்கதிர்வேலோன்..” எனும் கந்த சஷ்டி பாடல், அந்த சாலையின் வழி போவோர் வருவோர் என அனைவரும் மனதிலே ஒருவித புத்துணர்வை
...Enjoyed this?
Sign in to clap