Skip to content
வலியில் மலர்ந்த வசந்தம் நீயடா(டி)

வலியில் மலர்ந்த வசந்தம் நீயடா(டி)

1
14
SERIES
Ongoing#familynovels #lovenovels #tamilnovels
Nithyapriya
Nithyapriya

About

குடும்பப் பாரங்களைச் சுமக்கும் முரளியும் அன்பரசியும் சந்தித்து, காதலுக்கு முன்பே ஒருவருக்கொருவர் துணையாகிறார்கள்.

குடும்ப எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டாலும், கூட்டுக்குடும்பம் அவர்களின் வாழ்க்கையைச் சோதிக்கிறது.

ஒவ்வொரு பிரச்சனையிலும் அன்பரசிக்கு துணையாக முரளி நிற்கிறான்.

குடும்ப அழுத்தங்களையும் வாழ்க்கைச் சோதனைகளையும் காதலோடு இருவரும் எப்படி வெல்கிறார்கள் என்பதே இக்கதை.

விடியற்காலை ஐந்து மணி இருக்கும். மொபைலில் அலாரம் அடிப்பதற்கு முன்பே முரளியின் கண்கள் சட்டென்று திறந்தன. அவனுக்கு வயது இருபத்தி ஆறு தான். ஆனால் அவனது முகத்தில் இருந்த முதிர்ச்சியும், கண்களில் தேங்கியிருந்த சோர்வும் நாற்பது வயது மனிதனைப் போன்ற தோற்றத்தை அவனுக்குக் கொடுத்திருந்தன. இந்த வயதிற்குரிய எந்த ஒரு துள்ளலோ, கனவுகளோ அவனது வாழ்க்கைப் பக்கங்களில் தேடினாலும் இல்லை. அவனது உலகம் முழுவதும் தன் குடும்பத்தின் வறுமையோடு மட்டுமே சுருங்கிப் போயிருந்தது. கட்டிலில் இருந்து எழுந்த அவனுக்கு முதலில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap