
விழியோரத்தேடல் நீ (தீபாஸ்)
About
காதல் எப்போதும் நாயகனின் நெறியில் நடப்பதில்லை. சில நேரங்களில் அவன் செய்யும் தவறுகளின் நிழலில் தான் உண்மையான காதல் மலர்கிறது. இந்த கதையின் நாயகன் முழுமையானவன் அல்ல. ஆனால் அவன் காதல் முழுமையானது. ஒரு பெண்ணின் மனதை வெல்ல நினைத்த ஒருவனின் தேடல். அதுவே விழியோரத் தேடல் (Anti Hero Novel)
விழியோரத் தேடல் நீ
(தீபாஸ்)
தேடல் – 01
அந்தக் கருப்பு நிற ஆடி கார் டிராஃபிக் சிக்னலில் நின்றிருந்தது. அதன் பின்சீட்டில் உட்கார்ந்திருந்த மஹிந்தன் வெளியே பார்த்தான்.
காருக்குப் பக்கத்தில் சிவப்பு நிற ஸ்கூட்டியில் செம ஸ்ட்ரக்சருடன் ஒருத்தி சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தாள்.
ஏனோ நம்ம மஹிந்தனுக்கு அவளுடைய கண்ணியமான சுடிதாரும், வஞ்சனையில்லாமல் தெரிந்த வளைவு சுளிவுகளும் பிடித்துப்போயின.
வாவ்...! செம ஷேப்! என்று நினைத்தபடி அவளுடைய முகத்தைப் பார்த்தான்.
பச்சை நிற துப்பட்டாவையே முகமூடியாக்கி, நெற்றி, கண்கள்
...Enjoyed this?
Sign in to clap