
கொடிமலர் B.Com
About
தங்கராசு – வெகுளியான இளைஞன்! கண்டிப்பான அம்மா, கலகலப்பான ஆச்சிகள், பண்ணை, தோட்டம், தோப்புகள்... பழவிளை கிராமம்தான் அவனது உலகம்!
கொடிமலர் – படிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருப்பவள். அக்கா, அப்பாவுடன் கிராமத்திற்கு வருகிறாள். முதல் சந்திப்பிலே தங்கராசுவின் உலகத்தில் நுழைகிறாள் மலர். ஆனால் மலரின் கல்வி, அவள் அக்காவின் காதல், மலர் அப்பாவின் கோபம், திருமணத்தில் தங்கராசு அம்மாவின் எதிர்பார்ப்பு... என எல்லாமே ஒரு பெரிய குழப்பம்!
மண் வாசம் நிறைந்த கலகலப்பான கிராமத்துக் காதல் கதை!!
கொடிமலர் B.Com
© Kathambari. All rights reserved. No part of this work may be copied, stored, reproduced, or republished in any form without written permission from the author.
அத்தியாயம் – 1
தமிழகமெங்கும் கிளைகளைப் பரப்பிக் கொண்டிருந்த ஒரு அலைபேசி சேவை நிறுவனம், தங்களது அடுத்தக் கிளையை அந்தக் கிராமத்தில் நிறுவியிருந்தது.
கிராமத்தில் இருக்கின்ற ‘பாலிடெக்னிக்’ கல்லூரியைக் குறிவைத்தே இந்தக் கிளையை நிறுவனம் தொடங்கியிருந்தது. அச்சிறு கிளையின் வெளிப்புறச் சுவரில், விலைச்சலுகை என்னென்ன உள்ளன என்பதைக் கூற
...Enjoyed this?
Sign in to clap