
உருகியோடும் மெழுகு போல
0
0
EBOOK•
CompletedIthayamozhi championship 2026
About
விளையாட்டாய் வளர்ந்த மகளின் வாழ்வில் விதி விளையாடினால்? அதில் பெறாத தாயின் அன்பு நுழைந்தால்? இனிய தென்றல் போல் நம்பிக்கை தரும் குறுநாவல் இது...
உருகியோடும் மெழுகு போல் டாக்டர் அகிலாண்ட பாரதி அத்தியாயம் 1 சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் விளக்கு முன்னால், அஞ்சறைப் பெட்டியில், கைப்பையில், மேஜை டிராயரில் எங்கும் தேடிச் சலித்துப் போனாள் சித்திரை வடிவு. காலையிலிருந்து செய்யும் வேலைகளில் படபடப்பாகவே செய்தாள். அம்மாவைக் கேட்க மனமில்லை. சரி இருக்கட்டும் என்று புதுப் புடவையை எடுத்துக் கொண்டு அறையில் நுழைந்து கதவைத் தாளிட்டாள். அரக்குக் கலரில் கம்பி ஜரிகை வைத்து பட்டுச் சேலை போல் பளபளத்தது புடவை. ஆனாலும் அது பட்டு அல்ல, கைத்தறிச் சேலை...
Loading...
Enjoyed this?
Sign in to clap