
விதியை மாற்றிடும் திருத்தங்கள்!
About
இது ஒரு time travel கதை! முந்தைய காலத்தில் நடந்த துயர நிகழ்வுகளை திருத்தியமைக்க நாயகனுக்கும் நாயகிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஏன் வாய்ப்பு கிடைக்கிறது? அவர்களால் கடந்த காலத்தில் நிகழ்ந்ததை மாற்றியமைக்க முடிந்ததா! என்னென்ன நிகழ்வுகள்? விறுவிறுப்பான கதைக்களத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
அத்தியாயம் 1
‘பொதிகை மலை உச்சியினிலே புறப்படும் தென்றல்..’ என்று பி.சுசீலா அம்மா.. தனது இனிய குரலில் பாடியிருப்பாங்க! அந்த பாட்டு தென்றல் போல் மனதை வருடியிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஆனால் அன்று பொதிகை மலை உச்சியில் மேனியை வருடும் காற்று.. வீசவில்லை. ஆளை அடித்து புரட்டி போடும் சூறாவளி காற்று வீசிக் கொண்டிருந்தது.
அங்கேயே அவ்வாறு என்றால்.. பொதிகையை தாண்டி.. அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் எவ்வாறு இருக்கும் என்று நினைத்து பாருங்கள்!
அங்கு தான் காட்டிலதிகாரி சங்கர் தனது குழ
...Enjoyed this?
Sign in to clap