
இதயத்தின் இழைவரி கவிதைகள்
About
சில இழைகள் இணைந்து நெய்யும் போது... அது காதல் ஆகிறது.”
அறுவை அரங்கில் அவனது விரல்கள் தீண்டும் ஒவ்வொரு நொடியும் விடைபெறும் மரணம்... ஆனால், இவள் அருகில் வரும்போதோ அவனது நெஞ்சுக்குள் மட்டும் கட்டுப்பாடற்ற ஒரு காதல் துடிப்பு கேட்கிறது!
கர்வத்தின் சாம்ராஜ்யமும், எளிய மனதின் தூய அர்ப்பணிப்பும் ஒன்றோடொன்று இணையும் இடத்தில்...
அதிகாரத்தின் எல்லைகளைத் தாண்டி, இதயத்தின் ஆழத்தைத் தொட்டு நெய்யப்படும் ஒரு அழகான காதல் காவியம்!
இதயத்தின் இழைவரி கவிதைகள்
விரைவில் உங்கள் கண்முன்னே! 💛✨
இதயத்தின் இழைவரி கவிதைகள்
அத்தியாயம் 1: அதிகாரமும் அர்ப்பணிப்பும்
வேலூர் மாநகரத்தின் மையப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் கம்பீரமாக விரிந்து பரந்திருந்தது ‘ராய் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ்’. மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவம், நர்சிங், பார்மசி, அலைடு ஹெல்த் சயின்ஸ், பிசியோதெரபி, பொறியியல், கலை மற்றும் சட்டக் கல்லூரிகள் என ஒரு மாபெரும் கல்வி மற்றும் மருத்துவ சாம்ராஜ்யமாக அது திகழ்ந்தது. மும்பையை பூர்வீகமாகக் கொண்ட பிரபல மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ரமேஷ் ராய் பல தசாப்தங்களுக்கு ம
...Enjoyed this?
Sign in to clap