
இசை, இயற்கை மற்றும் இருவர்
About
தேன்பாவை - இசையை நேசிக்கும் ஒரு கர்நாடக இசைப் பாடகி.
சிவபாண்டியன் - இயற்கையை நேசிக்கும் ஒரு புகைப்படக் கலைஞன்.
இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். அந்த நேசம், அவர்களை திருமண பந்தத்தில் இணைக்கிறது.
ஆனால் அன்பிற்கு... அவள் கொடுத்து வைத்திருக்கும் வடிவம் வேறு.
அவன் தரும் விளக்கங்கள் வேறு.
இருவரது எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது.
திருமண வாழ்வில் இவர்கள் இடையே இருக்கும் காதலால் பிரியத்தை எழுதுவார்களா, இல்லை முரண்பாடுகளால் பிரிவை எழுதுவார்களா?
இசை, இயற்கை மற்றும் இருவர்
© Kathambari. All rights reserved. No part of this work may be copied, stored, reproduced, or republished in any form without written permission from the author.
அத்தியாயம் - 1
ஒரு அரங்கம்! சிறிய அரங்கம்தான்! அரங்கம் முழுதும் பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர்! கர்நாடக சங்கீதத்தை ரசிக்கும் பார்வையாளர்கள்!!
அரங்கத்தின் மேடையோரத்தில் ஆள் உயர குத்துவிளக்கு! ஆரஞ்சு வர்ண சாமந்திப்பூக்கள் சுற்றப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன! விளக்கின் திரி மற்றும் தீபத்திலிருந்து வரும் ந
...Enjoyed this?
Sign in to clap